ஐபிஎல் தொடருக்கு நோ சொல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டி ரத்தானால் 4 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்திய வீரர்களை கொண்டு தொடரை நடத்தலாம் என ஆலோசனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் இல்லை என்றால் ஐபிஎல் 2020 சீசனுக்கு ‘NO’ சொல்வோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் இருந்து வெளியான செய்தியில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டியை பார்க்க இயலாது. இது மற்றொரு சையத் முஷ்டாக் அலி டிராபி (உள்ளூர் டி20 தொடர்) போன்றுதான் இருக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மோசமான சூழ்நிலைக்குப் பிறகு அணிகள் பிசிசிஐ-யை தொடர்பு கொள்ளவில்லை. இந்த வருடத்தின் இறுதியில் ஐபிஎல் தொடர் நடக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news