ஐபிஎல் பிளே ஆப் சுற்று – ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சுற்று நேற்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 2 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 89 ரன்களை குவித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 47 ரன்கள் எடுத்தார்.

குஜராத் சார்பில் ஷமி, யாஷ் தயாள், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சாஹா 2வது பந்தில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து ஷுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் பொறுபுடன் ஆடினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. ஷுப்மான் கில் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் வேட் 35 ரன்னில் வெளியேறினார்.

தொடர்ந்து இறங்கிய கேப்டன் பாண்ட்யா நிதானமாக ஆடினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த டேவிட் மில்லர் அரை சதமடித்து அசத்தினார்.

இறுதியில், குஜராத் அணி 3 விக்கெட்டை இழந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பாண்ட்யா 40 ரன்னுடனும், மில்லர் 68 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools