ஐ.எஸ்.எல் கால்பந்து இன்று தொடக்கம்

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இன்று தொடங்கி மார்ச் மாதம் வரை நடக்க உள்ளது.

இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எப்.சி. மும்பை சிட்டி, ஐதராபாத் எப்.சி. ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

போட்டியின் முதல் நாளான இன்று கொச்சியில் அமைந்துள்ள நேரு மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் கேரளா-கொல்கத்தா அணிகள் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

சென்னையின் எப்.சி. அணி தனது முதலாவது லீக்கில் எப்.சி.கோவாவை 23-ம் தேதி அவர்களது இடத்தில் சந்திக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news