ஐ.எஸ்.எல் கால்பந்து – கவுகாத்தி, கேரளா இடையிலான போட்டி டிராவானது

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள இந்திரா காந்தி அதெலடிக் மைதானத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கவுகாத்தி எப்.சி, கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். ஆனாலும், எந்த அணியாலும் கோல் அடிக்கவில்லை.

இறுதியில், கவுகாத்தி, கேரளா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news