ஐ.எஸ்.எல் கால்பந்து – சென்னை, ஒடிசா இடையிலான போட்டி டிராவானது

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி., ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் 0-0 என சமனிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் 51 மற்றும் 71வது நிமிடங்களில் நெரிஜஸ் வல்ஸ்கிஸ் சிறப்பாக தலா ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒடிசா அணியின் அரிடேன் 54வது நிமிடத்திலும், சிஸ்கோ 82 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இதனால் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

சென்னை அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி, 2 சமன் என 5 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒடிசா அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி, 3 சமன் என 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news