ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை சென்னை வீழ்த்தியது

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் நிதானமாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சென்னை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். சென்னை அணியின் வால்கிஸ் 57வது நிமிடத்திலும், கிரிவெல்லாரோ 59வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில், சென்னையின் எப்.சி. அணி 2-0 என்ற கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம், சென்னை அணி தான் ஆடிய 12 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வி மற்றும் 3 ஆட்டங்களில் டிரா செய்து 15 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது.

நார்த் ஈஸ்ட் அணி தான் ஆடிய 11 ஆட்டங்களில் 4ல் தோல்வி அடைந்து 11 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news