ஐ.எஸ்.எல் கால்பந்து – மும்பையை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொண்ட கேரளா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து 8-வது போட்டி தொடர் கோவாவில் நடை பெற்று வருகிறது. நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின.

கேரளா அணி தரப்பில், சஹல் சமத் ஒரு கோல் அடித்தார். மற்றொரு வீரர் அல்வரோ 2 கோல்களை பதிவு செய்தார். மும்பை சிட்டி அணி வீரர் டியாகோ தமது அணிக்காக ஒரு கோல் அடித்தார்.

ஆட்டத்தின் முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மும்பையை தோற்கடித்தது. இதன் மூலம் 9-வது வெற்றியை பெற்றுள்ள அந்த அணி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி அணி, ஏ.டி.கே. மோகன் பகான் அணியுடன் மோதுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools