ஐ.பி.எல் கிரிக்கெட் – பெங்களூரை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீசியது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய ரியான் பராக் அரை சதமடித்து 56 ரன்கள் எடுத்து
ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 27 ரன்கள் எடுத்தார்.

பெங்களூர் சார்பில் சிராஜ், ஹசில்வுட், ஹசரங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் அணி தத்தளித்தது.
கேப்டன் டூ பிளசிஸ் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், பெங்களூர் அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ராஜஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்தது.

ராஜஸ்தான் சார்பில் குல்தீப் சென் 4 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools