ஓட்டல் ஊழியரின் செயலால் கோபமடைந்த விராட் கோலி!

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று பெர்த் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த போட்டி முடிவடைந்த பின்னர், இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி, ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ஓட்டல் ஊழியர் தன்னுடைய அறையை படம் பிடித்து வெளியிட்ட வீடியோ என பதிவிட்டு, தனது அறையில் தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

ரசிகர்கள் அவர்களுடைய பிடித்தமான வீரர்களை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் எப்போதுமே அதை பாராட்டக் கூறியவன். ஆனால் இங்குள்ள இந்த வீடியோ பயங்கரமானது மற்றும் இது எனது தனியுரிமையைப் பற்றி மிகவும் உணர வைத்துள்ளது.

தன்னுடைய சொந்த அறையில் கூட தன்னுடைய தனியுரிமை மீறப்பட்டால், தனிப்பட்ட இடத்தை நான் எங்கே எதிர்பார்க்க முடியும்?. தனியுரிமை மீறப்பட்ட இந்த விசயத்தை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தயது செய்து மக்கள் தனியுரிமைக்கு மரியாதை கொடுங்கள். அவர்களை பொழுது போக்கிற்கான பொருளாக கருத வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் வார்னர் கூறுகையில் ” இந்த விஷயம் மிகவும் கேலிக்கூத்தானது. முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது” என தெரிவித்துள்ளார். விராட் கோலியின் அறையில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பதை அந்த ஊழியர் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools