கங்குலிக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பாராட்டு விழா

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான், லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் ஒரு நாள் கோப்பையை அவர் இந்தியாவுக்காக வென்று கொடுத்தார்.

இது குறித்து கங்குலி கூறியதாவது:-

இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நான் ஒரு பெங்காலி என்று பாராட்டப்பட்டது நன்றாக இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த விருதை வழங்குகிறார்கள். இந்த முறை நான் அதைப் பெற்றேன்.

என்றார்.

முன்னதாக கங்குலி தனது 50-வது பிறந்தநாளை கடந்த ஜூலை 8-ம் தேதி லண்டனில் பயின்று வரும் தனது மகளுடன் கொண்டாடி மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியா, இங்கிலாந்து அணியிடம் இழந்த போதிலும், டி-20 தொடரை போல, இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools