”கடவுள் என் முன்னாடி வந்தா…” – வைரலாகும் விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பதிவு

2005-ம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதன்பின்னர் டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பிரபலமடைந்தார்.

இவர் தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். 2012-ம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது இவர் கைவசம் கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், ரத்தம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

விஜய் ஆண்டனி சமீப காலமாக தொடர்ந்து பல கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், தற்போது இவரின் பதிவு ஒன்று கவனம் ஈர்த்து வருகிறது. அதில், “கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி, மதம், கோயில், சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, பணிவா கேப்பேன். நீங்க என்ன கேப்பிங்க?” என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools