கட்டுமான தளத்தில் சிமெண்ட் தூண் விழுந்து 3 பேர் பலி!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று காலை கட்டுமான தளத்தில் சிமென்ட் தூண் ஒன்று டிப்பர் வாகனத்தின் மீது விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மண்டி மாவட்ட அவசர நடவடிக்கை பிரிவு வழங்கிய தகவலின்படி, டிப்பர் வாகனத்தில் 5 பேர் இருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலியாரில் உள்ள இடத்தில் சிமென்ட் தூண் டிப்பர் வாகனம் மீது விழுந்தது. காயமடைந்தவர் மேல்சிகிச்சைக்காக மண்டி மண்டல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பாகன விவரங்கள் காத்திருக்கின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools