கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் 2019-ல் நடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவினார். தற்போது மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் காங்கிரசில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools