X

கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு தங்க பரிசு வழங்கிய விஜய் சேதுபதி

சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழிலாளியின் மகள் இலக்கியா, மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த தங்கமங்கையை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக அகில இந்திய விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு நேரில் சென்று தங்கத்தை வழங்கி பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.