கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் – அமைச்சர் பொன்முடி கபடி விளையாடினார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கபடி வீரர்களுடன் கபடி விளையாடினார்.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஹரிதாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news