கலை உணவுத் திட்டம் குறித்து மாணவர்கள் வரைந்த ஓவியம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

காலை உணவுத் திட்டம் குறித்து கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமி ஒருவருக்கு உணவு ஊட்டி விடுவது போன்ற காட்சியை தத்ரூபமாக பள்ளியில் உள்ள போர்டில் வரைந்திருந்தனர்.
பள்ளி மாணவர்கள் வரைந்த அந்த ஓவியத்தை மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருப்பதோடு, மாணவர்களையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “இந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய்ப் பரப்புரைகளும் தோற்றோடும். அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news