கல்கிக்கு ரசிகர்களை விட ரசிகைகள் தான் அதிகம் – நடிகர் பார்த்திபன்

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படத்தை தஞ்சைக்கு சென்று ஒரு திரையரங்கில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து இன்று காலை படம் பார்த்தார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தஞ்சை மண்ணுக்கும், ராஜராஜ சோழனுக்கும் வணக்கம். 1973-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ராஜராஜ சோழன் திரைப்படத்தை இதே மண்ணில் நான் பார்த்தேன். அதே மகிழ்ச்சியுடன் இந்த படத்தை பார்க்க இன்று வந்துள்ளேன். நான் பேசும் சில வார்த்தைகள் மாறிப் போய்விடுகிறது. நான் சினிமாவின் தீவிர ரசிகன். பொன்னியின் செல்வனை வெற்றி பெற செய்வோம். பொன்னியின் செல்வனில் நடித்து, அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பதை பெருமையாக பார்க்கிறேன். கல்கிக்கு ரசிகைகள் அதிகமாக இருந்துள்ளார்கள். ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள்.

அதனால் தான் கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிகளவில் இருந்துள்ளனர். 70 வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட நாவலுக்கு இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது முதல் வெற்றி. கல்கியின் எழுத்துக்களுக்குத்தான் தான் முதல் வெற்றி. அடுத்தது மணிரத்தனம் இயக்கத்திற்கு.

இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறிய வேடம் தான். ஆனால் இவ்வளவு பெரிய திரைப்படத்தில் நான் நடித்திருப்பது பெருமையாக உள்ளது. நான் படத்தை பார்க்க வந்தேன் என்பதை விட இந்த படத்தை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள் என்று பார்ப்பதற்காக வந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools