காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்த கணவர்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார்கள். அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் இருபக்கமும் காஜல் அகர்வால் நடுவில் அவரது கணவர் இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் என்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை பார்க்க சமீபத்தில் காஜல் தனது கணவருடன் சென்றிருந்தார். ஒரு பக்கம் காஜல் அகர்வாலும் இன்னொரு பக்கம் மெழுகுச் சிலையுடன் உள்ள காஜலுடனும் இணைந்து கெளதம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் யார் உண்மையான காஜல் அகர்வால்? என்று கருத்து தெரிவித்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools