காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதரை தரிசிப்பதற்கான நேரம் அதிகரிப்பு

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நேற்று 9-வது நாளாக மாம்பழ நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் சென்று அத்திவரதரை தரிசித்தனர்.

நேற்று ஒரே நாளில் அத்திவரதரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர்.

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என்று இருந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி மேல் அத்திவரதரை அதிகாலை 4½ மணி முதல் இரவு 10 மணி வரை தரிசிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news