காந்தி மண்டபம்

காந்திக்கு மெட்ராஸுடன் பெரிய தொடர்பு இருந்தது. அவரது பெயரிடப்பட்ட முதல் பொது இடம் எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் சாலை தான். ஆச்சரியப்படும் விதமாகச் சுதந்திரத்திற்கு 15 ஆண்டுகளுக்கு முன் இது ஆங்கிலேயர்களால் பெயரிடப்பட்டது .

காந்தி 16 முறை சென்னை வந்துள்ளார். ஆனால் அவரது விஜயங்கள் நடந்த 50 ஆண்டுகளில் தான் என்ன ஒரு பரிணாம வளர்ச்சி. நகரத்திலும் சரி. காந்தியிலும் சரி.

மெட்ராஸ் நகரில் பல்வேறு ரூபங்களில் வெவ்வேறு குரல்களில் காந்தி பேசினார். முதல் முறையாக அவர் கோட் சூட்டில் வந்தது, தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களின் கஷ்டங்களைப் பற்றிப் பேசத்தான். பச்சையப்பன் அரங்கில் சலிப்படைந்த பார்வையாளர்களுக்கிடையே ஒன்றரை மணி நேரம் ஓர் உரையை எழுதிவைத்து வாசித்தாராம். மகாத்மாவாகப் போற்றப்படுவதற்கு முன்பு, அவர் பார்க் டவுனில் ஒருமுறை ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் போல ஒரு குடிமகன் உலகில் எங்கும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது’ என்று கூறினார்.

View more on kizhakkutoday.in

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools