காஷ்மீரில் கிராம இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்தில்  இரண்டு உள்ளூர் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பஞ்சாபைச் சேர்ந்த மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோ  ஹெராயின் மீட்கப்பட்டது. அவர்கள் தர்ன் தரனைச் சேர்ந்த ஜக்தீப் சிங் (21), சதீந்தர்பால் சிங் மற்றும் அமிர்தசரஸைச் சேர்ந்த சன்னி குமார் (22) என அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையின்போது இரண்டு  இளைஞர்கள் மீது மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக சம்பா மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பெனம் தோஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர், ரங்கனூர் பேருந்து நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில்  ராம்கர் செக்டரைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கடத்தல்காரர்களில் ஒருவரும் காயமடைந்தனர். இவர்களுக்கு உள்ளூர் மருத்துவ வசதியில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், கைது செய்யப்பட்ட  கடத்தல்காரர்களிடம் இருந்து,  சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8  கிலோகிராம் ஹெராயின், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சில ரவுண்டுகள், ₹ 93,200 மதிப்புள்ள பணம் மற்றும் நான்கு விலையுயர்ந்த மொபைல் போன்கள் பறிமுதுல் செய்யப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news