கிரிக்கெட்டில் எப்போது இயல்பு நிலை திரும்பும் – கங்குலி விளக்கம்

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் அனைத்து விளையாட்டுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் கிரிக்கெட்டும் அடக்கம்.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என செயலி ஒன்றின் மூலம் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளதாவது:

கொரோனா வைரஸ் திடீரென உலகை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

நம்மிடம் இந்த வைரசுக்கு மருந்து எதுவும் இல்லை. ஆனால், 6 அல்லது 7 மாதங்களில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

கிரிக்கெட் மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம் ஆனால் கிரிக்கெட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது பி.சி.சி.ஐ. மற்றும் ஐ.சி.சி.க்கு நரக வேதனை தான். மருந்து கண்டுபிடித்த பின்னர் தான் கிரிக்கெட்டில் இயல்பு நிலை திரும்பும் என தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news