கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதி இல்லை என்று யாரும் குறை சொல்லவில்லை – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிறுசிறு பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும். திறப்பதில் அவசரம் காட்டியதாலேயே பயணிகளுக்கு சிரமம் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில்

* கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து யாரும் புகார் கூறவில்லை.

* கிளாம்பாக்கத்தில் 100 கோடி அளவிலான பணியை திமுக அரசு மேற்கொண்டது.

* கிளாம்பாக்கத்தில் விரைவில் ரெயில் வசதி ஏற்படுத்தப்படும்.

* கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதி இல்லை என்று யாரும் குறை சொல்லவில்லை.

* இரவு நேரத்தில் பேருந்துகள் இல்லை என்ற குறைபாடு மட்டும்தான் வருகிறது என்று கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news