கீப்பிங் செய்யும்போதே சச்சினின் பேட்டிங்கை ரசிப்பேன் – பாகிஸ்தான் முன்னள் கேப்டன்

india-can-win-in-australia-sachin

கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின் தெண்டுல்கர். சக அணி வீரர்களை தவிர்த்து எதிரணி வீரர்களும் சச்சின் தெண்டுல்கர் பேட்டிங்கை ரசிப்பார்கள்.

எந்தவொரு காலக்கட்டத்திலும் எதிரணி வீரர்களுடன் ஒழுங்கீனமான நடந்து கொண்டது கிடையாது. இதனால் எதிரணி வீரர்களும் சச்சினுடன் நட்புடன் பழக விரும்புவார்கள்.

இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரை ஒருபோதும் அவுட்டாக்க எனது மனம் விரும்பியதில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷித் லத்தீப் கூறுகையில் ‘‘நான் விக்கெட் கீப்பராக பணியாற்றிய காலத்தில் ஏராளமான பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய வந்துள்ளனர். ஆனால் சச்சின் தெண்டுல்கர் மட்டும் பேட்டிங் செய்ய வரும்போது, அவர் ஆட்டமிழக்க வேண்டும் என எனது மனம் ஒருபோதும் விரும்பியது கிடையாது.

நான் கீப்பிங் பணியை செய்து கொண்டிருக்கும்போது அவரது பேட்டிங்கை ரசிப்பேன். அவர் விளையாடுவதை டி.வி.யில் அல்ல, ஸ்டம்பிற்கு பின்னால் நின்று விக்கெட் கீப்பர் பணியை செய்யும்போது ரசிப்பேன்.

ஆனால் பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், கல்லீஸ் ஆகியோர் பேட்டிங் செய்யும்போது, கீப்பிங் செய்யும்போது அவுட்டாக்க வேண்டும் என்று நினைப்பேன். தெண்டுல்கரின் பழக்க வழக்கம் தனித்துவம் வாய்ந்தது. நான் ஸ்டம்பிற்கு பின்னால் நின்று ஏதாவது கூறினால் கூட, ஒருபோதும் பதில் அளிக்க மாட்டார் அல்லது எதிர்வினை ஆற்றமாட்டார். ஜஸ்ட் புன்னகை சிந்துவார்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news