குஜராத் ஐபிஎல் அணியில் இருந்து விலகிய ஜேசன்ராய்க்கு பதில் ஆப்கானிஸ்தான் வீரர் சேர்ப்பு

 

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் இடம் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் 28-ந் தேதி மோதுகின்றன. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் குஜராத் அணியில் உள்ள இங்கிலாந்து வீரர் ஜேசன்ராய் இந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார். தொடர்ச்சியாக கொரோனா பாதுகாப்பு வளையத்தில் விளையாடி வருவதால் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளதாகவும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்றும் கூறி அவர் விலகுவதாக அறிவித்தார்.

இதற்கிடையே ஜேசன் ராய்க்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாசை குஜராத் அணி ஒப்பந்தம் செய்து உள்ளது. அவர் 20 ஓவர் போட்டிக்கேற்ற சிறந்த வீரராக கருதப்படுகிறது. அவரை ஒப்பந்தம் செய்ய கிரிக்கெட் வாரிய ஒப்புதலுக்காக குஜராத் அணி காத்திருக்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools