கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா!

ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100 சதவீத தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், தடுப்பூசி போடும் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 2 சென்ட் அளவுள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும், இதனை ஒரு மாத காலத்திற்குள் அமைச்சர் வழங்குவார்கள் என்று அறிவித்துள்ளார்.

மேலும்   தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு 4 பேருக்கும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கும், 3-ம் பரிசாக ரூ.500 மதிப்புள்ள சேலைகள், ரூ.500 மதிப்புள்ள வேட்டிகள் தலா 10 பேருக்கு வழங்கப்படும். ஆறுதல் பரிசாக 4 பேருக்கு ரூ.400 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் தடுப்பூசி போட குவிந்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools