கோகலே ஹால்

சைனா பஜாரின் கிளைச் சாலையான ஆர்மேனியத் தெரு, பிளாக் டவுனில் பாரம்பரிய நிதி மையமாக இருந்தது. ஐரோப்பாவில் துருக்கியர்களால் தங்கள் நாடு அழிக்கப்பட்ட பின்னர் ஆர்மேனிய புலம் பெயர்ந்தோர் இங்கு வாழ்ந்தனர். பின்னர், செயின்ட் மேரிஸ் ஹால் மற்றும் பின்னி தலைமையகம் போன்ற சமூக, மத மற்றும் வணிக நிறுவனங்கள் இந்தச் சாலையில் வந்தன. மேலும் வடக்கே அது யூதர்களும் பின்னர் நாட்டுக்கோட்டை செட்டியார்களும் பெரும் பணம் சம்பாதித்த பவளக்காரத் தெரு வரை நீட்டிக்கப்பட்டது (திமுக என்ற கட்சியை ஆரம்பிக்கும் யோசனையும் இந்தச் சாலையில்தான் வந்தது).

ஆனால் இந்தச் சாலையின் அரசியல் முக்கியத்துவம் அதிகத் தாக்கத்துடன் மிகவும் முன்னதாகவே தொடங்கியது. மெட்ராஸ் நகரின் அரசியல் சிந்தனை மற்றும் கலாச்சார விரிவாக்கத்தில் இவ்வளவு பெரிய பங்கை ஆற்றிய பிறகு, ஒரு கட்டடம் இன்று மிகவும் பாழடைந்து கிடக்கிறது என்றால் அது உண்மையிலேயே கோகலே ஹால்தான்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்மேனியத் தெருவில் தேசியவாதியான அன்னி பெசன்ட் தன் சொந்தச் செலவில் கட்டிய அரங்கம் கோகலே ஹால். கட்டி முடிப்பதற்கும் பெருந்தலைவர் கோகலே மரணம் அடைவதற்கும் சரியாக இருக்கவே, அவர் பெயர் சூட்டப்பெற்றது.

View more at kizhakkutoday.in…

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools