கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு – மேலும் 2 பேரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள்

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் ஒன்று வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உயிரிந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்டிருந்த பெரோஸ் கான், உமர் பாரூக், முகமது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய இரண்டு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools