சட்லஜ் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து – முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் மாயம்

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. நேற்று தனது நண்பரான திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள சட்லஜ் ஆற்றின் மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் விழுந்தது.

இந்த விபத்தில் டிரைவர் பலியானார். சைதை துரைசாமியின் மகன் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டார். காரில் இருந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயம் அடைந்த கோபிநாத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் கார் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமான வெற்றி துரைசாமியை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news