சர்வாதிகார போக்கை கடைபிடிக்கும் அமைச்சர்களுக்கு பாடம் புகட்டுவோம் – மு.க.ஸ்டாலின் தாக்கு

கோவை சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில், அத்தொகுதியை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ., கார்த்திக்கை போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு தி.மு.க. தக்க பாடம் கற்பிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், வேலூரில் தி.மு.க.வை ஆளும் கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற கார்த்திக் எம்.எல்.ஏ-வும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை? சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு தி.மு.க. தக்க பாடம் கற்பிக்கும் என பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news