சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – முதலமைச்சர் சித்தராமையா

இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாக இது தொடர்பாக கூறியதாவது:-

நேற்று அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை இன்னும் முடிவடையவில்லை. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மீடியாக்களில் சில அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் ரத்த குரலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியாக செய்தி பொய்யானது. எங்களுடைய கருத்துகனை முன்வைத்தோம். அவ்வளவுதான். வாக்குவாதமோ, குரலை உயர்த்தி பேசிய சம்பவங்களோ நடைபெறவில்லை. ஆலோசனைகள் கொடுக்கப்பட்டது. அதைத்தவிர வேறும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு சித்தராமையாக தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools