சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்த வீரர்களுக்கு ஜெர்சி வழங்கி வரவேற்ற ஸ்ரீனிவாசன்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 31-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியும் சென்னை அணியும் மோதவுள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் புதிதாக இணைந்த வீரர்களுக்கு அவர்களுக்கான ஜெர்சி வழங்கப்பட்டது. இதனை அணி நிர்வாகம் சார்பில் ஸ்ரீனிவாசன், டோனி, ஸ்டீவன் பிளெமிங், காசி விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர். ஜெர்சி வழங்கும் புகைப்படம் சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

அதில் புதிதாக அணியில் இடம் பெற்ற பென் ஸ்டோக்ஸ், ரகானே, நிசாந்த், மண்டால், ரஷித் ஆகியோர் அவர்களுக்கான ஜெர்சியை பெற்று கொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools