சிஎஸ்கே வீரர்கள் பென் ஸ்டோக், தீபக் சாஹர் காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணி வீரர்கள் தீபக் சாஹர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில்  நடைபெற்ற லீக் ஆட்டத்தின்போது தீபக் சாஹருக்கு தசை நார் முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் முதல் ஓவரிலேயே ஆட்டத்திலிருந்து வெளியேறினார். அதேபோல், பென் ஸ்டோக்ஸுக்கு பாதத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இத்தகவலை சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிஎஸ்கே அணி அடுத்ததாக ஏப்ரல் 12-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கெதிராக விளையாடவுள்ளது. அந்தப் போட்டியில் இந்த 2 வீரர்களும் பங்கேற்பார்களா என்பது தெரியவில்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools