சிங்கத்திடம் பசுவை காப்பாற்றிய விவசாயி – வைரலாகும் வீடியோ

குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது கிர் தேசிய பூங்கா. இது உலகப் புகழ்பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான தேசியப் பூங்கா ஆகும்.

இந்நிலையில், கிர் வனப்பகுதியில் சிங்கம் ஒன்று பசு மாடு ஒன்றை இரையாக்க முயற்சித்தது. இதனைக் கண்ட பசுவின் உரிமையாளர் தடுத்துக் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை பா.ஜ.க.வை சேர்ந்த விவேக் கோடாடியா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், சாலையில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை பெண் சிங்கம் ஒன்று தாக்குகிறது. பசு மாட்டின் கழுத்தை இறுகப் பிடித்துக்கொண்ட அந்தச் சிங்கம் அதை இழுக்க முயற்சிக்கிறது.

அச்சமயம் அங்கு வந்த பசு மாட்டின் உரிமையாளரான விவசாயி திடீரென ஒரு செங்கலை எடுத்து சிங்கத்தை நோக்கி வீசினார். இதைக் கண்டதும் சிங்கம் பிடியை தளர்த்துவிட்டு காட்டுக்குள் ஓடுகிறது. பசுவும் உயிர் பிழைக்கிறது.

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. பசுவைக் காப்பாற்றிய விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news