சிங்கத்தை தொடர்ந்து யானையை கையில் எடுக்கும் ஹரி – சூர்யா கூட்டணி!

சூர்யா- ஹரி காம்போவில் உருவான ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இவர் கூட்டணி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருக்கிறது. இந்த புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால், தற்போது சூர்யா – ஹரி இணையும் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ‘யானை’ என பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

படத்தயாரிப்பில் சில காலமாக ஈடுபடாமல் இருந்த ஏவிஎம் நிறுவனம் தற்போது மீண்டும் இப்படம் மூலம் தயாரிப்பில் களமிறங்க இருக்கிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools