சிபிஐ அதிகாரியாக நடிக்கும் மீனா

90 மற்றும் 2000 காலங்களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக விளங்கியவர் மீனா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் என கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி போட்டவர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இவர் தமிழில் கடைசியாக நடித்திருந்த திரைப்படம் 2011ல் நரேன் நடிப்பில் வெளியான தம்பிக்கோட்டை. தற்போது இவர் மீண்டும் தமிழில் ஒரு புதிய இணைய தொடரில் நடிக்கப்போகிறார். டிரெண்ட்லவுட் மற்றும் ஜீ5 தயாரிக்கும் இந்த தொடரை அருண் விஜய் நடிக்கும் பாக்சர் படத்தை இயக்கிவரும் விவேக் இயக்குகிறார்.

இந்த தொடருக்கு கரோலின் காமாட்சி என்று பெயரிட்டுள்ளனர். இந்திய உளவுத்துறை அதிகாரியாக மீனாவும் பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரியாக ஜியார்ஜியோ அன்ரியானியும் நடிக்கிறார்கள். இந்த தொடரின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools