சிவகங்கையில் துப்புறவு பணி செய்த கவர்னர்!

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

பின்னர் அவர் சிவகங்கைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் சிவகங்கை நகராட்சி பஸ் நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டார்.

இதில் கலெக்டர் ஜெயகாந்தன், அமைச்சர் பாஸ்கரன், தலைமை கூடுதல் செயலாளர் ராஜகோபால், செந்தில்நாதன் எம்.பி., மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சிவகங்கையில் உள்ள வேலு நாச்சியார் விருந்தினர் மாளிகையில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

சிவகங்கையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கவர்னர் செல்கிறார். ராமேசுவரத்திற்கு நாளை (12-ந் தேதி) காலை செல்லும் கவர்னர் அங்கு புனரமைக்கப்பட்ட 30 தீர்த்தங்களை பொது மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news