X

சீனுராமசாமி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார்

’கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. சமூக கருத்துக்களை அதிகம் பேசிய இப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. சீனு ராமசாமி, தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்திற்கு மாறியுள்ளார் சீனு ராமசாமி. இப்படத்தில், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இதுகுறித்து, இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, ”ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறேன். இது இதுவரை வந்த என் படங்களில் சற்று மாறுதலாக ஆக்‌ஷன் திரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படமாகும். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது” என்று கூறியுள்ளார்.