சுங்கச்சாவடி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய பா.ஜ.க எம்.பி-யின் பாதுகாவலர்கள்

உத்தரப் பிரதேசம் மாநிலம் எடாவா தொகுதி பா.ஜ.க மூத்த எம்.பி.யும், தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவருமாக இருந்து வருபவர் ராம்சங்கர் கதேஹரியா.

இவர் எடாவாவில் இருந்து டெல்லிக்கு ஒரு சொகுசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அவருடன் 4 கார்களும் சென்றன.

ரஹன்கலா என்ற இடத்தில் உள்ள சுங்கச்சாவடி மையத்தின் அருகே பஸ்சும், கார்களும் வந்தது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அவர்களிடம் சொகுசு பஸ்சுக்கு கட்டணம் செலுத்தும்படி கூறினர்.

இதில் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் ஆத்திரம் அடைந்த எம்.பி.யின் பாதுகாவலர்கள் சுங்கச்சாவடி மைய ஊழியர்களை தாக்கி, மிரட்டினர்.அத்துடன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுதொடர்பான புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news