செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து – 5 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அருகே லாரி மீத அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருச்சி- சென்னை சாலையில் தொழுப்பேட்டில் நிகழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools