சென்னையில் இடியுடன் கூடிய கனமழை

தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று பிற்பகல் முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

சென்னையில், ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

அடையாறு, திருவான்மியூர், பெசன்ட்நகர், தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

காலையில் சுட்டெரித்த வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் பிறபகலில் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news