X

சென்னையில் பரபரப்பு.. திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்.. குழப்பத்தில் மக்கள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கடல் அலைகள் நீல நிறமாக மாறியதாக தகவல் பரவியது.

இதனால் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடற்கரை பகுதிகளில் திரண்டனர். திருவான்மியூர் கடற்கரையில் திரண்ட வாலிபர்கள் கடல் அலைகள் நிறம் மாறி இருப்பதை கண்டு ரசித்தனர். பின்னர் தங்களது செல்போன் மற்றும் காமிராக்களில் படம் எடுத்து பகிர்ந்தனர்.

மேலும் அந்த காட்சிகளை பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பினர்.

View more…

Tags: south news