X

சென்னையில் ராணுவ வீரர் சுட்டுக்கொலை

சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் பிரவீன் குமாருக்கும் அவருக்கு கீழ் பணியாற்றிய ரைபிள் மேன் ஜெக்ஷீர் தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ரைபிள் மேன் இன்று அதிகாலை 3 மணிக்கு ஹவில்தாரின் அறைக்கு சென்று உள்ளார். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஹவில்தாரை ரைபிள் மேன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார். பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.