சென்னை விமான நிலையத்திற்கு 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலைய ஆணையத்தின் இ-மெயில் முகவரிக்கு இன்று காலை வந்த தகவலில், சென்னை விமான நிலையத்தில் கழிவறை, ஓய்வு அறை பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் வெடிக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை, புரளி என்பது தெரிந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து சென்னை விமான நிலையத்துக்கு தொலை பேசி மற்றும் இ-மெயிலில் மிரட்டல்கள் வந்தபடி உள்ளது. தற்போது 7-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools