சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் தோகாவில் இருந்து சென்னை வந்த பயணியிடம் சந்தேகத்தின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் இருந்து 11 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 11 கிலோ ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.11 கோடி என தகவல் வெளியாகி உள்ளது.

இதைத் தொடர்ந்து போதைப் பொருளை கடத்தி வந்த இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், போதைப் பொருளுடன் சிக்கியவர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பாரத் வசிட்டா என தெரிய வந்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools