சென்னை விமான நிலையத்தில் 1083 கிராம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1083 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜோலி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 20-ந் தேதி சென்னை வந்த பயணியை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டனர். இதில் நூதன முறையில் மறைத்து எடுத்துவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதனை உருக்கிய போது 1083 கிராம் எடை கொண்ட தங்கம் கிடைத்தது.

இதன் மதிப்பு ரூ.47.41 லட்சமாகும்.மேலும் 9400 சிகரெட்டுகளை கொண்ட 47 பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு 94 ஆயிரம் ரூபாயாகும். கடத்தலில் ஈடுபட்ட பயணிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools