பிரசிடென்சி கல்லூரி

மெட்ராஸில் உள்ள ஒரு கல்லூரியுடன் நோபல் பரிசு பெற்ற இருவர் தொடர்பு கொண்டுள்ளனர். ஒருவர் மாணவராகவும் ஒருவர் ஆசிரியராகவும்! இந்தியாவில் பாரத ரத்னா பெற்ற முதல் மூன்று பேர் இந்தக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள்.

ஆனால் அவர்களுக்கு எல்லாம் அங்குச் சிலை இல்லை. கல்லூரி மைதானத்தில் உள்ள ஒரே சிலை, அங்குக் கல்வி கற்பித்த தமிழ் பேராசிரியருக்கு மட்டுமே. அது தான் உ.வே.சுவாமிநாத ஐயர் சிலை.

தென்னிந்தியாவின் மிகப் பழமையான கல்லூரி என்றால் அது பிரசிடென்சி கல்லூரிதான். இதன் வயது 183. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட இரண்டு பிரசிடென்சி கல்லூரிகளில் இதுவும் ஒன்று, மற்றொன்று கொல்கத்தாவில் உள்ளது.

View more in kizhakkutoday.in

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: Chennai 360