சேலம் – மயிலாடுதுறை இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் வௌயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

லாலாபேட்டை, குளித்தலை ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும், நாளையும் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சேலம்- மயிலாடுதுறை மெமு விரைவு ரெயில் (வண்டி எண்.16812) இன்றும், நாளையும் பிற்பகல் மதியம் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு கரூரை வந்தடையும். கரூர்- மயிலாடுதுறை இடையே சேவை இருக்காது. அதே நேரத்தில் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்றும், நாளையும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் கரூரில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும். வண்டி எண் 16812 என்ற ரெயில் நின்று செல்லும் அதே நிறுத்தங்களில் இந்த சிறப்பு ரெயில் நின்று செல்லும்.

இதேப்போல் திருச்சி- ஈரோடு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண். 06809) வழக்கமாக திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools