ஜடேஜாவின் பேட்டிங் வளர்ச்சி அணிக்கு முக்கியம் – கங்குலி கருத்து

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின், ஜடேஜா ஆகியோர் திகழ்ந்தனர். மூன்று பேரும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடி வந்தனர். ஆனால் 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற பிறகு, இருவரும் கழற்றி விடப்பட்டனர். ஆனால், ஜடேஜா தீவிர முயற்சியால் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

சமீப காலமாக அவர் பேட்டிங்கில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளார். நேற்றைய போட்டியில் ஆட்டமிழக்காமல் 31 பந்தில் 39 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் ஜடேஜாவின் பேட்டிங் முன்னேற்றம் இந்திய அணிக்கு முக்கியமானது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்திய அணிக்கு மீண்டும் ஒரு வெற்றி. வாழ்த்துக்கள். நெருக்கடியான போட்டியில் சிறப்பான பேட்டிங் ஃபெர்பார்மன்ஸ். பேட்டிங்கில் ஜடேஜா முன்னேற்றம் அடைந்துள்ளார். அது இந்திய அணிக்கு முக்கியமானது’’ என கங்குலி தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news