ஜடேஜா, ரெய்னாவிடம் சவால் விட்ட விராட் கோலி

மூன்று வகை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். தனது அபாரமான ஆட்டத்தால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். அதன்பின் 2010-ல் டி20- கிரிக்கெட்டிலும், 2011-ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகம் ஆனார்.

11 வருடத்திற்கு முன் U-19 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய பின், 20 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு வரும்போது அரும்பிய மீசை, தாடியுடன் அமுல்பேபி போன்று காட்சியளித்தார்.

தற்போது கடும் உடற்பயிற்சியின் மூலம் உடலை பிட் ஆக வைத்திருப்பதுடன், ட்ரிம் செய்த தாடியுடன் காட்சியளிக்கிறார்.

இந்நிலையில் அப்போதைய படத்தையும், தற்போதைய படத்தையும் வெளியிட்டு அற்புதமான மாற்றம். நீங்களும் இதேபோன்று உங்களுடைய புகைப்படங்களை உலகிற்கு வெளியிடத் தயாரா? என்று ஜடேஜா மற்றும் ரெய்னாவிடம் கேட்டுள்ளார் விராட் கோலி. ஜடேஜா கோலியுடன் U-19 உலகக்கோப்பையில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news